சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, அருணா ஜெகதீசன் அறிக்கை இரண்டையும் சட்டசபையில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, அருணா ஜெகதீசன் அறிக்கை இரண்டையும் சட்டசபையில் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.