ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் பி.டி நித்யா கூறியதாவது: ஏ.எல்.எச் ஹெலிகாப்டர் ஒன்று 8 பேருடன் வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள மன்பாலில் இருந்து உதம்பூருக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் 2 விமானிகள், 2 தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் 4 பயணிகள் உள்பட 8 பேர் இருந்தனர். பின்னர், கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் புறப்பட்டுச் சென்றது என்று தெரிவித்தார்.