சென்னை

த்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏப்ரல் 11-16 சென்னையில் ராணுவக் கண்காட்சி நடைபெறும் என அறிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் ராணுவ தொழில் வளர்ச்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.   இதில் மத்திய பாடுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் கலந்துக் கொண்டுள்ளார்.    அவர் அங்கு உரையாற்றினார்.

அமைச்சர் தனது உரையில், “ சென்னையில் வரும் ஏப்ரல் மாதம் 11 முதல் 16ஆம் தேதி வரை ராணுவ கண்காட்சி நடைபெற உள்ளது.    இன்று அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.    இந்த அக்னி 5 ஏவுகணைகான முக்கிய தளவாடங்கள் தமிழக தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டவைகள் ஆகும்.   இதை நான் இங்கு அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன்.   அது மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள நிறுவனங்களிடம் இருந்து 712 தொழில்நுட்பங்கள் பெறப்பட்டுள்ளன”  எனத் தெரிவித்தார்.