பாரிஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் உலக வில்வித்தை ரீகர்வ் பிரிவு பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது.

உலக கோப்பை வில்வித்தை சாம்பியன்ஷிப், ‘ஸ்டேஜ் 3’ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்கள் அணிகளுக்கான ‘ரீகர்வ்’ பிரிவில் தீபிகா குமாரி, சிம்ரன்ஜீத் கவுர், அன்கிதா பகத் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது.

அரையிறுதியில் துருக்கி அணியை வீழ்த்திய இந்திய அணி, ஜூன் 26ல் நடக்கவுள்ள இறுதி போட்டியில் சீனதைபே அணியுடன் மோத உள்ளது.