டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று  பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

டோக்கியோவில் இன்று  ஆடவர் வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீரர்  ஹர்விந்தர் சிங்  கலந்துகொண்டார். ஹர்விந்தர் சிங் ஏற்கனவே நடைபெற்ற  அரையிறுதி போட்டியில்  தோல்வியடைந்த நிலையில், இன்று வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில்,  தென் கொரியாவின் கிம் மின் சூவை வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, பாராலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் பதக்கங்களை வீரர், வீராங்கனைகள் வென்றுள்ளனர்.