சென்னை: சேலம், அரக்கோணம் இடையே இயக்கப்பட்டு வந்த மெமு ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி, இன்று முதல் ( 20.01.2025 முதல் மறு அறிவிப்பு வரும் வரை, செயல்பாட்டு காரணங்களுக்காக மறு அறிவிப்பு வெளியிடும்வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அரக்கோணத்தில் இருந்து 05:15 மணிக்கு புறப்பட்டு சேலம் ஜங்ஷனில் 10:50 மணிக்கு வந்தடையும், ரெயில் எண் 16087 அரக்கோணம் – சேலம் மெமு ரெயில் வாரத்தில் 5 நாட்கள் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதுபோல, சேலம் ஜங்ஷனில் இருந்து 15:30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்தில் 20:45 மணிக்கு வந்தடையும், ரெயில் எண் 16088 சேலம் – அரக்கோணம் மெமு ரெயில் வாரத்தில் 5 நாட்கள் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.