சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு தேதிகளை தமிழ்நாடு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ந்தேதி தொடங்கி முதல் மே 2 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2021–2022-ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதையடுத்து பொதுத் தேர்வுக்கான தேதிகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 5ம் தேதி  தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 6ம் தேதி  தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையடுத்து தற்போது செய்முறை தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடத்தி முடிக்க வேண்டும் செய்முறை மதிப்பெண் பட்டியல்களை பள்ளிகள் மே 4ஆம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

ஏப்ரல் 25 முதல் மே 2 வரை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு…