சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஆகஸ்டு 14ந்தேதி தொடங்குவதாகவும், மாணவர்கள்,   இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம் என கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்து உள்ளது. ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆகஸ்டு 14ந்தேதி தொடங்கி  ஆகஸ்ட் 22-ம் தேதி  வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜி.கீதா வெளியிட்ட அறிவிப்பில்,  தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் 24,341 இடங்கள் உள்ளன. இவற்றை நடப்பு கல்வியாண்டில் (2023-24) நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி விருப்பமுள்ளவர்கள் www.tngasa.in, www.tngasa.org ஆகிய வலைதளங்கள் வாயிலாக ஆகஸ்ட் 14 முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் ‘The Director, Directorate of collegiate education, chennai-15’ என்ற பெயரில் வரைவோலை எடுத்து செலுத்தலாம். இதுதொடர்பான மேலும் விவரங்களை அறிய 9363462070, 9363462042, 9363462007, 9363462024 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.