தமிழ்நாடு அரசுடன் தைவான் நாட்டைச் சேர்ந்த பெகாட்ரான் நிறுவனம் சமீபத்தில் செய்துள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் சென்னையில் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.

தைவான் நாட்டைச் சேர்ந்த முன்னணி மின்னணு நிறுவனமான பெகாட்ரான், ஆப்பிள் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களை உற்பத்தி செய்து வருகிறது.

இதுவரை சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் இதனை இந்தோனேசியாவுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

ஆனால் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களுக்கான நுகர்வு அதிகரித்திருப்பதை அடுத்து இதன் தயாரிப்பையும் இந்தியாவில் தொடங்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.