ஸ்டாக்ஹோம்: இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி, நடப்பு  ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸூக்கு(annie ernaux) அறிவிக்கப்பட்டுள்ளது. “தனிப்பட்ட நினைவகத்தின் வேர்கள், பிரிவினைகள் மற்றும் கூட்டுக் கட்டுப்பாடுகளை வெளிப்படுத்தும் தைரியம் மற்றும் மருத்துவக் கூர்மைக்காக” வழங்கப்படுகிறது. அவரது எழுத்தில், , பாலினம், மொழி மற்றும் வர்க்கம் தொடர்பான வலுவான ஏற்றத்தாழ்வுகளால் குறிக்கப்பட்ட வாழ்க்கையை பல்வேறு கோணங்களில் ஆராய்கிறார். ஆசிரியருக்கான அவரது பாதை நீண்டது மற்றும் கடினமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.