சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

அண்ணா பிறந்தநாளை ஒட்டி நல்லெண்ண அடிப்படையில், 10ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த  700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  அதில், பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், மத மோதல், சாதி மோதலில் ஈடுபட்டவர்கள், அரசிற்கு எதிராக செயல் பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தவிர மற்றவர்கள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ள கைதிகள் விடுதலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்தது. அதனடிப்படையில்,  தமிழக சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் முதல் கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, புழல் மத்திய சிறையில் இருந்து 13 பேர், வேலூர் மத்திய சிறை 2 பேர், கடலூர் மத்திய சிறை 5 பேர், சேலம் மத்திய சிறை ஒருவர், கோவை மத்திய சிறை 12 பேர், திருச்சி மத்திய சிறை 12பேர்,, மதுரை மத்திய சிறை 22பேர், , திருச்சி பெண் சிறை 2பேர், , புழல் பெண் சிறை 2பேர்,, புதுக்கோட்டை சிறை 4 பேர், என மொத்தம் 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலையாகியுள்ளனர் .