ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது. இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இது ராம் சரணின் 15-வது படமாகவும். ராம்சரனுக்கு கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார் .

இப்படத்தின் பாடல்களுக்கு நடன இயக்குநராக ஜானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . தற்போது நடிகை அஞ்சலியை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.