டெல்லி: அப்போலோ மருத்துவமனை மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதிகள் பற்றாக்குறை எழுந்துள்ளது.

டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி அதிகம் பற்றாக்குறை காணப்படுகிறது. இந் நிலையில், டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளிக்கு ஐசியு படுக்கை கிடைக்காததால் உயிரிழந்ததாக நோயாளியின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

பெண் நோயாளி உயிரிழந்ததை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த அவரது  உறவினர்கள் அப்போலோ மருத்துவமனை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மருத்துவமனை மீதும், ஊழியர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.