Andhra Pradesh minister’s son dies in road accident in Hyderabad

ஆந்திர அமைச்சரின் மகனும் அவரது நண்பரும் கார் விபத்தில் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலத்தின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் டாக்டக் நாராயணாவின் மகன் நிதிஷித்தும், அவரது நண்பர் ராஜா ரவி வர்மாவும் ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுள்ளனர். அமைச்சரின் மகன் நிஷித் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். லண்டனுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள அமைச்சர் நாராயணா இந்தத் தகவலை அறிந்து உடனடியாக திரும்பிக் கொண்டிருக்கிறார்.

ஆந்திராவில் அண்மையில் விஐபிக்களின் வாரிசுகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் பாபு மோகன், வெங்கட் ரெட்டி, திரைப்பட நடிகர் கோட்டா ஸ்ரீநிவாசராவ் ஆகியோரது வாரிசுகள் அண்மையில் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்தனர்.