விசாகப்பட்டினம்

ந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு 1200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் கோடை கடுமையாக உள்ளது.

இதனால் சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி கிருஷ்ணா நதி நீரைத் திறந்து விட ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

கோரிக்கையை ஏற்ற ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 1200 கன அடி நீர் திறந்து விட்டுள்ளது.

இந்த நீர் இன்று இரவு தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டை வந்து அடைய உள்ளது.