சென்னை: பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக தேர்வு பெற்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றுவிட்டு, தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக பொறுப்பேற்றார் .

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்க தலைவர் மற்றும் உறுப்பனிர்களுக்கான தேர்தலில், அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியின்றி  தலைவராக தேர்வானார்.

இதையடுத்து இன்று அவர் மொநில தலைவராக பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது. முன்னதாக, சாரணர் இயக்க உடையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் அன்பில் மகேஸ், அதைத்தொடர்ந்து,  பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.