மும்பை:

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரம மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீதேவி இறப்பதற்கு 20 நிமிடங்கள் முன்னதாக அமிதாப்பச்சன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில்,‘‘நான் எதையோ நினைத்து சங்கடமாக உணர்கிறேன். இனம் புரியாத அச்சம் எனக்குள் ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து வெளியான பின்னர் தான் ஸ்ரீதேவியின் மரண செய்தி வெளிவந்தது. எப்படி அமிதாப்பச்சன் முன்கூட்டியே எதிர்மறையான அதிர்வுகளை உணர்ந்தார் என்ற அதிர்ச்சி சமூக வலை தளத்தை தாக்கியது.

திரைத்துறையில் உடன் பணியாற்றிய ஒருவரது மரண செய்தியை முன்கூட்டியே அமிதாப்பச்சன் எப்படி உணர்ந்தார் என்ற கருத்துக்கள் டுவிட்டரில் பரவி வருகிறது. சிலர் இதை ‘விசித்திரமான சரியான டுவிட்’ என்றும் சிலர் ‘தீவிர முன்னுணர்வு’ என்று கருத்து தெரிவித்துள்ளனர்.