சண்டிகர்: தன்னை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங். இவருக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் சட்டசபை கூட்டத்தொடர் விரைவில் கூடவுள்ளதையடுத்து, அம்மாநிலத்தில் மொத்தம் 29 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, லேசான கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள டக்டர்கள் அறிவுரை வழங்கியதையடுத்து, தன்னை தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக்கொண்டார் அமரீந்தர் சிங். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளார்.