சென்னை: தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களுக்கு ரூ.5 ஆயிரம் செலவு செய்யலாம்  என  தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுவரை ரூ.1000 மட்டுமே செலவழிக்க அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 5 மடங்கு உயர்த்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

 இது தொடர்பாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில்,  கிராம சபை நடத்த கிராம ஊராட்சி நிதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.1000 செலவு செய்ய கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. தற்போது 14 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்பதால், அதை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி கிராம சபை, சிறப்பு கிராம சபை நடக்கும் நாட்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொள்ள உரிய அரசாணை வழங்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டுள்ளளார்.

இதை அரசு கவனமாக பரிசீலனை செய்ததது. அதன் அடிப்படையில் கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கான செலவினம் ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி அரசு ஆணையிடுகிறது. மேலும் கிராம சபை, சிறப்பு கிராம சபை நடக்கும் நாட்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சி பொது நிதியில் இருந்து செலவினத்தை மேற்கொள்ள ஊராட்சி தலைவர்களுக்கு அனுமதி வழங்கி ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.