சென்னை: காங்கிரஸ் உள் கட்சி பிரச்னையில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம்’  என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன — பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடகங்கள் மூலம் அல்லாமல், கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும் என கூட்டணி கட்சிகளான வி.சி.க, ம.தி.மு.க, இடதுசாரிகளுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசியது முதல் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு கடன் விஷயத்திலும், பிரவீண் சக்கரவர்த்தி  பதிவு, திமுக அரசை குற்றம் சாட்டியது. இதனால் கூட்டணிக்குள் மேலும் குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை உள்பட  மூத்த நிர்வாகிகளே பிரவீண் சக்கரவர்த்தி நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தனர்.  இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டடணி வைக்க இருப்பதாகவும், அதற்கு பிரியங்கா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இதனால்,  திமுக தலைமையிலான   மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குள் உள்ள கட்சிகளிடையே  மோதல் வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இ,ந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் கூட்டணி கட்சிகள் கருத்து கூறக்கூடாது என  காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர்  பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் கூட்டணி கட்சிகள் கருத்து கூறக்கூடாது என்ற கருத்தை முன்வைத்து, மாணிக்கம் தாக்கூர் தனது X தளத்தில் நீளமான ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவின் முக்கிய அம்சங்கள்:

“விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களிடம் (காங்கிரஸ் தலைமை) ‘நடவடிக்கை எடுக்க’ கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றிச் செய்தி படித்தேன். இது ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது: காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது?

கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன — பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடகங்கள் மூலம் அல்லாமல், கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும்.

தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொதுக் கருத்துக்களை இந்தக் கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை ரவிக்குமார், துரைவைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் ‘உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்’ என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா?

ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சிச் செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும்.

சிபிஐ, சிபிஎம் தேசியத் தலைமைகள் தங்களது மாநிலச் செயலாளர்களுக்குக் குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும், கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல், அண்ணன் வைகோ, திருமாவளவன் அண்ணனும், கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் **’லட்சுமண் ரேகை’**யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல—ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய, அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல என கூறி உள்ளார்.

மாணிக்கம் தாக்கூரின் நேரடி விமர்சனம் மீண்டும் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]