பெங்களூரு:
சிகலா உடல் நிலை நன்றாக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் இருந்த சசிகலா, விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனைக்கு சென்ற சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் கையெழுத்து பெற்று விடுதலையை அறிவித்தனர். மேலும் இதுதொடர்பான எழுத்துபூர்வ அறிக்கையும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால் வரும் 31ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் புதிய தகவல் வெளியிட்டுள்ளது.