சென்னை: சென்னையை அடுத்த  நீலாங்கரை கடற்கரையில் அகில இந்திய பீச் வாலிபால் போட்டி நாளை தொடங்குகிறது. நாளை (8-ந் தேதி) முதல் 10-ந் தேதி வரை நீலாங்கரை கடற்கரையில் நடக்கிறது.

மெரீனா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இந்தியன் பீச் வாலிபால் போட்டி, மற்றும்  புரோ டூர் பந்தயம் சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் பீச் வாலிபால் போட்டி நாளை சென்னையை அடுத்த நீலாங்கரை கடற்கரை பகுதியில் நடைபெற உள்ளது.

இந்த பீல் வாலிபர் போட்டியில், ஆண்கள் அணி, பெண்கள் அணி இரு அணிகளும் கலந்துகொள்கின்றன. ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் கலந்து கொள்கின்றன. காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும்  போட்டி நடைபெறும் என மெரீனா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் பொதுச் செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் தெரிவித்து உள்ளார்.

இந்த போட்டிகளில்  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, கோவா, டாமன் டையூ ஆகிய மாநிலங்களில் இருந்து 28 அணிகள் பங்கேற்கின்றன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் பீச் வாலிபால் போட்டி நடக்கிறது. போட்டிகள் பகலிலும், இரவிலும் நடக்கிறது. காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெறு கிறது.

இந்த போட்டியில் ஆண்களுக்கான பரிசு தொகை ரூ.1 லட்சம் ஆகும். பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படுகிறது