சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக கடந்த 11 மாதங்களாக  கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கும், 10, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கும் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (பிப்ரவரி 8ந்தேதி) முதல்  கல்லூரிகளின் அனைத்து வகுப்புகளும் , 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணாக்கர்களுக்கும் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டு உள்ளன.

கல்லூரி மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள் ளநிலையில், கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், டிப்ளமோ கல்லூரி மாணவர்களுக்கும் இன்றுமுதல் வகுப்புகள்  திறக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.  பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதம் கண்டிப்பாக கொண்டு வர வேண்டுமென கல்வித்துறை தெரிவித்துள்ளது.