சென்னை,

மிழ்நாடு முழுதும் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் சிறப்பு காவல்படையினரை அசாதாரண சூழலை சமாளிக்க தயாராக இருக்கும்படி டிஜிபி டிகே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மொத்தம் 19 மாவட்டங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் அடங்கியுள்ள மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக இன்றும் நாளையும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.