பிரிட்டன்:
பிரிட்டன் நாட்டிலேயே சிறப்பாக ஆடை அணியும் பெண், அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி என்று தி டாட்லர் இதழ் அறிவித்துள்ளது.

பாரம்பரியத்தை மீறாமல், 43 வயதில் கண்ணியத்தை காக்கும் வகையில் அக்ஷதா மூர்த்தி ஆடைகளை தேர்வு செய்வதாக தி டாட்லர் இதழ் பாராட்டியுள்ளது.

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா, ஜி 7 மாநாட்டில் ரிஷி சுனக் உடன் பங்கேற்றபோது, அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்த ஆடைகளை தி டாட்லர் குறிப்பிட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தி, எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். பேஷன் டிசைன் கல்லூரியில் அவர் டிப்ளமோ பெற்றுள்ளார்