பீகாரில் ரஷீத் சித்திக் என்பவர் ‘FF NEWS’ என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார்.

இந்த சேனலில் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது குறித்து செய்தி வெளியிடப்பட்டது. இதில் இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரை களங்கப்படுத்தும் வகையில் செய்தி ஒளிபரப்பானதாக தெரிகிறது.

இதையடுத்து, அந்த சேனலுக்கு அக்‌ஷய் குமார் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், செய்தி வெளியிட்டதால், தனக்கு 500 கோடி ரூபாய் நஷ்டு ஈடு தர வேண்டும் என அதில் அக்‌ஷய் குறிப்பிட்டுள்ளார்.

சுஷாந்த் தற்கொலை வழக்கு குறித்து மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேயை அக்‌ஷய் சந்தித்து பேசினார் என்றும், நடிகை ரியா சக்கரவர்த்தியை கனடாவில் மறைத்து வைத்தார் என்றும் அந்த சேனல் செய்தி வெளியிட்ட நிலையில், இந்த நோட்டீசை அவர் அனுப்பி இருக்கிறார்.

“தன்னை பற்றி ஆதாரமற்ற செய்தி வெளியிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். சேனலில் வெளியான வீடியோ காட்சிகளை அழிக்கவேண்டும்” என்றும் அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

– பா. பாரதி