லக்னோ: மக்களவைத் தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலம் ஆஸம்கர் தொகுதியில் களம் காண்கிறார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.

இதன்மூலம், அவரும் மாயாவதியைப் போன்று, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுப்பார் என உலவிய செய்திகள் காணாமல் போயுள்ளன.

இந்தத் தொகுதியில் நடப்பு உறுப்பினராக இருப்பவர் அவரின் தந்தையும் கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம்சிங் யாதவ். தனது தொகுதியில் அகிலேஷ் போட்டியிடவுள்ளதால், முலாயம்சிங் யாதவ், மெயின்புரி தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

மெயின்புரி தொகுதியில், முலாயம்சிங் யாதவ் மொத்தம் 3 முறை வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அகிலேஷ் யாதவ், கடந்த தேர்தல்களில் கன்னோஜ் தொகுதியில் 3 முறை வெற்றிபெற்றுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு உத்திரப்பிரதேச முதல்வராக பதவியேற்றதையடுத்து, தனது கன்னோஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் அகிலேஷ்.

– மதுரை மாயாண்டி