டெல்லி:

ஏர்செல் -மேக்சிஸ் விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து மத்திய அமலாக்கத்துறை தனியாக விசாரணை மேற்கொண்டது. இது தொடர்பாக அமலாக்கத் துறையின் சார்பில் சி.பி.ஐ. தனிநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், கலாநிதி மாறனின் மனைவி காவேரி, தெற்கு ஆசியா எப்.எம்.நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சண்முகம், தெற்கு ஆசிய எப்.எம்.நிறுவனம், சன் டைரக்ட் நிறுவனம் ஆகியவற்றின் பெயர்களும் இடம்பெற்றன.

தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரும் மற்றவர்களும் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் கடந்த பிப்ரவரி 2-ந் தேதியன்று இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முகாந்திரமோ, உரிய ஆதாரங்களோ இல்லாததால் அனைவரும் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இருந்து சி.பி.ஐ. நீதிமன்றம் மாறன் சகோதரர்களை விடுவித்திருந்ததற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்க துறை மேல்முறையீடு செய்துள்ளது. கறுப்பு பணம் பற்றி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ச ரியாக பரிசீலிக்க்ப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.