டெல்லி:
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் படி, ஆனந்த் விஹார் மற்றும் அசோக் விஹாரில் நேற்று மாலை நிலவரப்படி காற்றின் தரக் குறியீட்டு எண், கடுமையான பிரிவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தீபாவளியன்று தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்ததால், காற்று மாசு தற்போது மீண்டும் மோசமான நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் மத்திய மாசு கட்டுபாட்டு வாரிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.