கதன்

ஷ்யாவில் எஞ்சின் கோளாற்றால் தரை இறங்கிய ஏர் இந்தியா விமான பயணிகள் உணவு, மருந்து இன்றி தவித்து வருகின்றனர்.

டில்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் நோக்கி ஏ.ஐ.173 என்ற எண் கொண்ட ஏர் இந்தியாவின் போயிங் 777 ரக விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது. விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்து உள்ளனர். நேற்று விமானத்தில் என்ஜின்களில் ஒன்று திடீரென பழுதடைந்து உள்ளது.

எனவே, ரஷ்யாவின் மகதன் விமான நிலையம் நோக்கி ஏர் இந்தியா விமானம் திருப்பி விடப்பட்டு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.  ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ரஷ்யாவின் மகதன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின்னர், பயணிகள் அனைவருக்கும் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டு உள்ளன என கூறினார்.

பயணிகள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு விரைவாகச் செல்வதற்கான மாற்று வழிகளையும் செய்து தருவோம். விமானத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் கூறினார். ஆனால் ரஷ்யாவில் ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு போதிய அளவில் வசதிகள் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.  இந்த விமானத்தில், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் என அனைத்து தரப்பினரும் பயணித்து உள்ளனர். அவர்களை பேருந்துகளில் அழைத்துச் சென்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் தங்க வைத்து உள்ளனர்.

பயணிகளுக்கு பெரும்பாலும் கடல் உணவே கிடைக்கிறது எனக் கூறப்படுகிறது. ஒரு சிலர் ரொட்டியும், சூப்பும் மட்டுமே சாப்பிட்டு உள்ள நிலையில் முதியவர்களுக்குத் தேவையான மருந்துகள் இல்லை,  மேலும் பள்ளியில் தங்க வைக்கப்பட்ட பயணிகள், தரையில் விரிப்பை விரித்து ஒரே அறையில், 20 பேர் என்ற கணக்கில் படுத்து உள்ளதாகவும் சரியான உணவு வசதி இல்லை. அவர்களுக்கு கோக் மற்றும் ரொட்டி அளிக்கப்படுவதாகவும் பயணி ஒருவர் கூறியுள்ளார்.

ஏர் இந்தியா மும்பையில் இருந்து மாற்று விமானம் ஒன்று இன்று அனுப்பி வைக்கப்படும் எனக் கூறியுள்ளது. அந்த விமானத்தில் மகதன் நகரில் இருந்து பயணிகள் சான் பிரான்சிஸ்கோ நகருக்குக் கொண்டு செல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.