ரோம்

போப் ஆண்டவர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது 86 வயதாகும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், குடல் அறுவை சிகிச்சைக்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாடிகன் தேவாலயத்தின் சார்பில் இது குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், கடந்த சில நாட்களாக ஹெர்னியா பாதிப்பால் போப் பிரான்சிஸ் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. மருத்துவர்களின் தீவிர பரிசோதனை மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அவர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருப்பார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.