புதுடெல்லி:
விதிமுறை மீறல் தொடர்பாக ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


விமானகளின் பயிற்சி தொடர்பான விதிமுறைகளை மீறியதாக ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ஏர் ஆசிய நிறுவன பயிற்சி தலைவரை மூன்று மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.