விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,551 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிக்கும் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவில், விக்கிரவாண்டியில் 84% வாக்குகளும், நாங்குநேரியில் 66% வாக்குகளும் பதிவாகின. 2021ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இத்தேர்தல் முடிவுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து விக்கிரவாண்டி தொகுதியில் தொடர்ந்து அதிமுக முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,551 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்பட்டார்.

அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன்: 1,09,359 வாக்குகள்

திமுக வேட்பாளர் புகழேந்தி: 66,184 வாக்குகள்

வித்தியாசம்: 44,551 வாக்குகள்

கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இத்தொகுதியில் திமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், திமுகவிடமிருந்து இத்தொகுதியை அதிமுக வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.