சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து வரும் நிலையில், தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக, தளர்வுகள் வழங்கி உள்ளது. இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான  தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்   சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.