சென்னை:
செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரி நேற்று அதிமுகவினர் ஆர்பாட்டம் ந்டத்தினர்,

இந்நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி., ஜெயவர்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னாள் எம்.பி., ஜெயவர்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இலாகா மாற்றத்திற்குப் பிறகு செந்தில்பாலாஜியை அமைச்சராக நீடிக்க கவர்னர் அங்கீகரிக்கவில்லை. இருப்ப்பினும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வார் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.