சென்னை:

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர்களாக முகமது ஜான், சந்திரசேகரன் ஆகியோரை அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அஇஅதிமுக சார்பில் 3 பேர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ள நிலையில், தற்போது அதிமுக ராஜ்யசபா  வேட்பாளர்களாக முஹம்மத் ஜான், சந்திரசேகரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு இடம் கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறிதுது,அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

அஇஅதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முஹம்மத் ஜான்அதிமுகவின் சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். வேலூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜான் முன்னாள் அமைச்சர் ஆவார்.

மற்றொரு அஇஅதிமுக வேட்பாளரான சந்திரசேகரன் மேட்டூர் நகரச் செயலாளராக தற்போது பதவி வகிக்கிறார். அஇஅதிமுகவின் இன்னொரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.