டெல்லி: அக்னிபாத் திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர 7,49,899 பேர் விண்ணப்பம்  செய்துள்ளனர் இந்திய விமானப்படை அறிவித்து உள்ளது.

மத்தியஅரசு, இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வகையிம்  ‘அக்னிபாத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தினர். பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வன்முறையானது.த்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ரயில் எரிப்பு, பொதுச்சொத்துக்கள் சூறையாடுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.

ஆனால், மத்தியஅரசு அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற முடியாது என்று அறிவித்ததுடன், சில தளர்வுகளை அறிவித்தது. அதைத்தொடர்ந்து, அக்னிபாத் திட்டத்திற்கான ஆள்சேர்ப்பு குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தன.

இந்த நிலையில், இந்த விமானப்படை அக்னிபாத் திட்டத்தின் கீழ் வேலையில் சேர விண்ணப்பிக்கலாம் என கடந்த ஜூன் 24 ந்தேதி அறிவித்தது. அதன்படி, விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஜூலை 5ந்தேதி என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, விண்ணப்ப பதிவு நேற்றுடன் (ஜூலை 5 ஆம் தேதி) முடிவடைந்த நிலையில் இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின்கீழ் சேர 7,49,899 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

கடந்த காலத்தில் வந்த 6,31,528 விண்ணப்பங்களுடன் ஒப்பிடுகையில், இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது  அதிகமானோர் விண்ணப்பித்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.