இம்பால்

இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் புகைப்படம் வைரலானதால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில காவல்துறையுடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்குக் குவிக்கப்பட்டுள்ளனர்.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிள் நடந்து வருகிறது ..

நேற்று மணிப்பூரில் சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்கள் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.  இந்த புகைப்படங்கள் குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், புகைப்படங்களில் பிணமாகக் கிடந்த இருவரும் மெய்தி இனத்தைச் சேர்ந்த 17,19 வயது மாணவர்கள் எனவும் கடந்த ஜூலை மாதம் இவர்கள் காணாமல் போனவர்கள் என தெரியவந்தது.

காவல்துறையினர் கொலையான மாணவர்களின் சடலங்கள் எங்குக் கிடக்கிறது என இடம் தெரியாமல் தேடி வருகின்றனர்.மணிப்பூர் அரசு இது குறித்து விரைவான நடவடிக்கை எடுத்து உடல்களைக் கண்டறியுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த மாணவர்கள் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்திருப்பது போன்றும், பிறகு அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது மணிப்பூரில் பதற்றத்தை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.