பெங்களூரு

ன்று பெங்களூருவில் தமிழகத்துக்குக் காவிரி நீர் திறப்பதை எதிர்த்து முழு அடைப்பு நடப்பதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் தொடர்பாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு காவிரி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்து அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 18 ஆம் தேதி தமிழகத்திற்குத் தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

கர்நாடகா தங்களிடம் போதிய நீர் இல்லாததால் இந்த உத்தரவை அமல்படுத்த ம் மறுத்துவிட்டது. கடந்த 21-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். எனவே தற்போது காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் இதைக் கண்டித்து போராட்டம் வெடித்துள்ளன. மண்டியாவில் கடந்த 23 அன்று முழு அடைப்பு நடத்தப்பட்டது. கர்நாடக நீர் பாதுகாப்புக் குழு, பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. இன்று பெங்களூருவில் (முழு அடைப்பு காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த முழு அடைப்பையொட்டி பேருந்து, ஆட்டோ, வாடகை கார்கள், டாக்சிகள் ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகரில் உள்ள திரையரங்குகள், கடைகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களும் அரசு-தனியார் பள்ளி-கல்லூரிகளும் மூடப்படுகிறது.  முழு அடைப்பு காரணமாகப் பள்ளிகளில் இன்று நடைபெற இருந்த காலாண்டு தேர்வு வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது., அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.