டெல் அவிவ்

நேற்றிரவு உடல் நலக் குறைவால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெஞ்சமின் நேதன்யாகு இஸ்ரேல் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்து வருகிறார்.. இவருக்குக் கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் ஷீபா மருத்துவ மையத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை சேர்க்கப்பட்டார்.

பிறகு அவர் சிகிச்சை முடிந்து மறுநாள் வீடு திரும்பினார். அவரது மருத்துவ பரிசோதனை முடிவுகள் இயல்பாக உள்ளதாகவும் அவர் நலமுடன் உள்ளார் என அவரது அலுவலகம் தெரிவித்தது. அவருக்கு இதய கண்காணிப்பு கருவியும் பொருத்தப்பட்டது.

நேற்று மாலை அந்த கருவி எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் ஒலித்தது. இதனால், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.  அவர் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தும் சிகிச்சை நடந்தது என தகவல் தெரிவிக்கின்றது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பு பிரதமர் நேதன்யாகு வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், நன்றாக உணர்கிறேன் என்றும் மருத்துவரின் அறிவுரையைக் கேட்டுச் செயல்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.