பெங்களூரு:

தேர்தல் முடிவு வெளியானதும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் ஆவதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று ஐக்கிய ஜனதாள தளம் தலைவர் தேவகவுடா கூறி உள்ளார்.

ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் முதன்முதலாக ராகுல்காந்திதான் பிரதமர் என்று அறிவித்துள்ள நிலையில், தற்போது, காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவரான தேவகவுடாவும் ராகுல்தான் பிரதமர் என்று உறுதிபட தெரிவித்து உள்ளார்.

முன்னாள் பிரதமரா தேவகவுடா தனது  87வது பிறந்தநாளையொட்டி இன்று திருமலைக்கு வந்தது ஏழுமலையானை தரிசித்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பு  செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேவகவுடா , கர்நாடகாவில் காஙகிரஸ் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கூறியவர், ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்தார்.