கொல்கத்தா: மேற்குவங்க தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றுவோம் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

294 தொகுதிகளைக்கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29ஆம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதுமுதல் கட்டமாக  152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெறுகிறது.  இதற்கான  வேட்பு மனுத் தாக்கல்  மார்ச் 30 தொடங்குகிறது.  வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்  ஏப்ரல் 06 ஆகும். இதையடுத்து ஏப்ரல் 7ந்தேதி  வேட்பு மனுப் பரிசீலனையும், ஏப்ரல் 8ந்தேதி  வேட்பு மனுத் திரும்பப் பெற இறுதி நாளாகும். இதையடுத்து, ஏப்ரல் 23ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

2வது கட்டமாக  142 தொகுதிகளுக்கு  ஏப்ரல் 29ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான  வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 02  தொடங்கு கிறது.  வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 09ந்தேதியும். தொடர்ந்து ஏப்ரல் 10ந்தேதி  வேட்பு மனுப் பரிசீலனை செய்யப்படுகிறது.வேட்பு மனுத் திரும்பப் பெற இறுதி நாள் ஏப்ரல் 13 இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் இந்த தொகுதிகளில் ஏப்ரல் 29ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளார்.

இந்த நிலையில் டெப்ராவில்  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட மம்தா பானர்ஜி பேசுகையில், “தேர்தல்கள் முடிந்து, மேற்கு வங்கத்தில் நாம் வெற்றி பெற்ற பிறகு, அனைவரையும் ஒன்றிணைத்து, நாடு முழுவதிலும் உள்ள மக்களைத் திரட்டி டெல்லியைக் கைப்பற்றுவோம்,” என்று கூறினார்.

மேலும், தனது கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் (TMC), மாநிலத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று உறுதியளித்தவர்,   அரசி​யல், கலாச்​சா​ரரீ​தி​யாக மேற்​கு​வங்​கத்தை தங்​கள் கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வர பாஜக தீவிர முயற்சி செய்​கிறது. இந்த முயற்​சியை நாங்​கள் முறியடிப்​போம்.

மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் அமோக வெற்றி பெற்று மீண்​டும் ஆட்சி அமைக்​கும். இதன்​பிறகு நாடு முழு​வதும் அனைத்து கட்​சிகளை​யும் ஒன்​றிணைத்து டெல்​லி​யிலும் ஆட்​சி​யைக் கைப்​பற்​று​வோம் என்றார்.

மாநிலத்தில் நடத்தப்பட்ட வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யின்​போது லட்​சக்​கணக்​கானோரின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன. எங்​களது சட்​டப் போராட்​டத்​தால் நீக்​கப்​பட்​டோரில் 50 சதவீதம் பேரை வாக்​காளர் பட்​டியலில் சேர்த்​துள்​ளோம். திரிண​மூல் காங்​கிரஸில் பழங்​குடி, இந்​து, முஸ்​லிம் வேட்​பாளர்​கள் இடம் பெற்று உள்​ளனர்.

அனைத்து தரப்பு மக்​களின் நலனுக்​காக நாங்​கள் பாடு​படு​கிறோம். ஆனால் பாஜக பிரி​வினையை தூண்டி வரு​கிறது. மேற்​கு​வங்​கத்​துக்கு வெளியே வங்​க மொழியை பேசுவோர் மீது கொடூர தாக்​குதல்​கள் நடத்​தப்​படு​கிறது. குறிப்​பாக பாஜக ஆளும் மாநிலங்​களில் இத்​தகைய தாக்​குதல்​கள் நடத்​தப்​படு​கின்​றன. பாஜக தலை​வர்​கள் மதத்தை வைத்து வியா​பாரம் நடத்​துகின்​றனர். நாங்​கள் மனித நேயத்தை முன்​னிறுத்தி சேவை​யாற்​றுகிறோம்​.

இவ்​வாறு அவர் பேசி​னார்​.

[youtube-feed feed=1]