சென்னை:
மிழகத்தில் சுக பிரசவங்கள் அதிகரிக்க யோகா வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகத்தில் ஆண்டிற்கு 10 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகிறது என்றும், 61% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறன என்றும் கூறினார்.

சுக பிரசவங்கள் அதிகரிக்க அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் மூச்சு பயிற்சி அளிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.