டில்லி,
க்களவை நெறிமுறைகள் குழுவின் (எதிக்ஸ் கமிட்டி) தலைவராக பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
அதுபோல அதிமுக எம்.பியான தம்பித்துரை தொகுதி மேம்பாட்டு நிதி திட்டக் குழுவின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை  உறுப்பினர்கள் யாரேனும் நெறி முறைகளுக்கு எதிராக நடந்து கொண்டால் அவர்கள்மீது விசாரணை நடத்தி பரிந்துரை செய்யும் எதிக்ஸ் கமிட்டி தலைவராக அத்வானி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த பதவியையே மீண்டும் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் மக்களவை நெறிமுறைகள் குழு உறுப்பினர்களாக தற்போதைய உறுப்பினர்களின் பதவி காலத்தையே மீண்டும் நீடித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நியமித்துள்ளார்.

மேலும், அவை அமர்வுகளில் உறுப்பினர்கள் கலந்து கொள்ளாதது தொடர்பான விவகாரத்தை கையாளும் குழு தலைவராக பி. கருணாகரனையும், அரசு வாக்குறுதிகள் தொடர்பான குழுத் தலைவராக ரமேஷ் போக்ரியால் நிசாங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்

மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, தனிநபர் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், தொகுதி மேம்பாட்டு நிதி திட்டக் குழுவின் தலைவராக தம்பிதுரை மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.