சென்னை
அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி நடிகர் விஜய், தொடங்கிய தமிழக வெற்றொல்லழல, இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தேர்தல் பணிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார்.
தற்போது த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பு என்றால் 8 முதல் 11 சி.ஆர்.பி.எப் வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிற்குள் மட்டும் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம்,
”த.வெ.க. தலைவர் விஜய்க்கு என்ன அடிப்படையில் மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுத்துள்ளது என்பது தெரியவில்லை. ஒரு கட்சியின் தலைவராக உருவாகியிருக்கிறார்; நடிகராக இருக்கிறார். அவர் செல்லும் இடங்களில் கூட்டம் அதிகமாக சேரலாம்.
அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெருந்தன்மையாக கொடுத்திருந்தால் மகிழ்ச்சி. இல்லை என்றால் அரசியல் ரீதியாக, சுயநலத்தோடு விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்காக, அவரை சந்தோஷப்படுத்துவதற்காக இந்த ஒய் பிரிவு பாதுகாப்பை கொடுத்திருக்கிறார்களா?
எனக் கூறி உள்ளார்.