விருதுநகர்

ண மோசடி விவகாரத்தில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருடைய உதவியாளர்கள் 3 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு  செய்யப்பட்டது.

கைதுக்குப் பயந்து முன்ஜாமீன் கோரிய அவரது மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் டிச. 17ல் தள்ளுபடி செய்தது.   இதனால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். ராஜேந்திர பாலாஜியை பிடிக்கக் குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது.

நேற்று ராஜேந்திர பாலாஜியைத் தனிப்படை காவல்துறையினர் கர்நாடகாவில் கைது செய்தனர். விசாரணைக்காக விருதுநகர் மாவட்டத்திற்கு ராஜேந்திர பாலாஜி கொண்டு வரப்பட்டார்.  நேற்று நள்ளிரவில் 3 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு இன்று காலை ராஜேந்திர பாலாஜியை சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான திருவில்லிப்புத்தூர் நீதித்துறை நடுவர் எண் 2ல் காவல்துறையினர் முன்னிறுத்தினர்.

ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாள் சிறை காவல் விதித்து நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார். முன்னதாக ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜி ஜனவரி 20ம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்.