மோடியின் பிடியில் அதிமுக தலைமையின் குடுமி

*** எம். ஜி. ஆர். உருவாக்கி, அவரது ‘இமேஜா’ல் கட்டமைக்கப்பட்டது அ. தி. மு. க!

அவரது மறைவுக்குப் பிறகு, அவருடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் ஜெயலலிதாவைத் தலைமையாக ஏற்றுக் கொண்டது அந்தக் கட்சி!

ஆனால், இந்த இருவருக்குமே, இவர்களுக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு மட்டுமே அக்கட்சியின் வெற்றிகளுக்குக் காரணமாக இருந்தது!

ஆனால், ஜெ. வின் மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் பலவித குழப்பங்கள் ஏற்பட்டு திசைமாறி திக்கின்றி சுக்கு நூறாகிக் கிடக்கிறது!

தற்போது இருக்கும் அ. தி. மு. க வை வழிநடத்தும் ‘இரட்டைத் தலைவர்கள்’ , பல விதங்களிலும் பொருளாதாரக் குற்றங்களில் சிக்கிக் கொண்டிருப்பதால், அவர்கள் ‘குடுமி ‘ மோடி குழுவினர் கையில் சிக்கி சின்னா பின்னப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது!

இதனால், இன்று அக் கட்சி மக்களின் சிரிப்பு க்கு இடமாகி இருக்கிறது!
இந்த ‘இரட்டையர்கள்’ பற்றி ‘ ஜெ ‘ என்ன நினைப்பார் என்பதை இந்தக் கார்ட்டூன் சொல்கிறது!

*** ஓவியர் இரா. பாரி.