சென்னை

மிழகத்தில் இன்று 719 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,31,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

 

இன்று தமிழகத்தில் 1,01,255 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,48,85,228 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 719 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 27,31,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவால் இன்று 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,539 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 737 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,86,683 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 8,013 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,58,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார்.  இதுவரை 8,617 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 113 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,48,951 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,189 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 120 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,50,327 பேர் பாதிக்கப்பட்டு 2,473 பேர் உயிர் இழந்து 2,47,182 பேர் குணம் அடைந்து தற்போது 1,272 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,74,143 பேர் பாதிக்கப்பட்டு 2,536 பேர் உயிர் இழந்து 1,70,977 பேர் குணம் அடைந்து தற்போது 630 பேர் சிகிச்சையில் உள்ளனர்.