சென்னை:
அ.தி.மு.க அலுவலக சாவியை ஈ.பி.எஸ் வசம் ஒப்படைத்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் ஈ.பி.எஸ் மற்றும் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அ.தி.மு.க அலுவலக சாவியை ஈ.பி.எஸ் வசம் ஒப்படைத்ததை எதிர்த்த வழக்கில் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் பதில் மனு தாக்கல். அ.தி.மு.க அலுவலக அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்தவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அப்பகுதில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காவல்துறையினர் வன்முறை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தியது. அதேபோல் இந்த வன்முறை விவகாரம் தொடர்பாக ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது, வன்முறையை வழக்குகளும் பதியப்பட்டது. மேலும் அ.தி.மு.க அலுவலக சாவியை ஒப்படைக்கு விவகாரம் என்பது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது. அதன்படி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தபடி அ.தி.மு.க அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டது. எனவே இந்த விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் முடிவுகளை தனிப்பட்ட முறையில் எடுக்கவில்லை மாறாக நீதிமன்ற உத்தரவையே செயல்படுத்தியுள்ளார்.