திருப்பூர்: பல்லடம்  தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிட்டார். தேர்தலின் போது, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். இந் நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 2 நாள்களாக காய்ச்சல், சளியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.